புதிய சிம் கார்டு பெற அதிக கட்டணம் வசூல்; ஷோரூம் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
செங்கல்பட்டு, ஆக.29: தொலைந்து போன சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம்கார்டு பெற ஏர்டெல் நிறுவனத்தின் முகவர் அதிக கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு அவர் ரூ.40,000 இழப்பீடு வழங்க செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டில் வசிக்கும் சரிதா என்பவர் கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவற...
செங்கல்பட்டில் தொலைந்த சிம் கார்டுக்குப் பதிலாக புதிய சிம் கார்டு வாங்கிய போது, ஏர்டெல் நிறுவன முகவர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சரிதா என்பவர், இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையம், முறையற்ற வகையில் அதிக கட்டணம் வசூலித்த முகவர், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.