PulseNews
வணிகம்

1 செ.மீ உயரம் குறைவு எனக் கூறி நிராகரித்த சி.ஏ.பி.எஃப்; மீண்டும் அளவிட குவஹாத்தி கோர்ட் உத்தரவு

மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) காவலர் (ஜெனரல் டியூட்டி) / அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள்மேன் (GD) பணிக்காக விண்ணப்பித்த ஒருவரின் உயரம், நிர்ணயிக்கப்பட்ட 165 செ.மீ.-க்கு பதிலாக 164 செ.மீ. இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அவரது உயரத்தை மீண்டும் மறுஅளவீடு செய்யாமலேயே அதிகாரிகள் தள்ளுபடி செய்ததைக் கண்டறிந்த கவுகாத்தி உயர்நீதிமன்றம், அவரது உயரத்தை மீண்டும் அளவிடுமாறு உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நெல்சன் சைலோ இந்த மனுவை விசாரித்தார். ஆக.12 அன்று பிறப்பித்த உத்தரவில், உடற்தகுதித் தேர்வு (PST) நிராகரிப்புச் சீட்டின்படி, உயரம் குறைவாக உள்ளதாகக் கூறி மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோது, அவர் அன்றைய தினமே தலைமை அதிகாரியின் மூலம் மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுதாரரும் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட உத்தரவில், அவரது உயரம் மீண்டும் அளவிடப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் தெளிவாகத் தெரியவில்லை. மனுதாரர் 2025-ம் ஆண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ் விண்ணப்பித்திருந்தார். 2025 ஆக.26 அன்று ஆட்சேர்ப்பு மையத்தில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, அவரது உயரம் 164 செ.மீ. எனப் பதிவாகி உடற்தகுதித் தேர்வில் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். கோர்ட் உத்தரவின்படி மேல்முறையீட்டு மனு விரைவாக பரிசீலிக்காததால், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, மே 12 அன்று அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மேல்முறையீட்டு நிராகரிப்பை எதிர்த்து மனுதாரர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினார். மனுதாரரின் மேல்முறையீட்டை நிராகரிக்கும்போது, புதிய அளவீடு எதையும் மேற்கொள்ளாமல், 2025 ஆகஸ்ட் 26 அன்று எடுக்கப்பட்ட அதே 164 செ.மீ. அளவீட்டையே காரணமாகக் காட்டி அதிகாரிகள் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே, மேல் முறையீட்டு நடைமுறையில் புதிய அளவீடு எதுவும் எடுக்கப்படாததால், மனுதாரரின் உயரத்தை மீண்டும் அளவிட்டு, அதன் முடிவை அவருக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிற முக்கியத் தீர்ப்புகள் கொல்கத்தா உயர்நீதிமன்றம்: சி.ஏ.பி.எஃப் காவலர் பணிக்கான தேர்வில், 'தோள்பட்டை எலும்பு விலகல்' (Winged Scapula) குறைபாடு உள்ளதாகக் கூறி மறு மருத்துவ பரிசோதனை வாரியம் (RME) ஒரு விண்ணப்பதாரரைத் தகுதியற்றவர் என அறிவித்த முடிவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உரிய ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் இன்றி, வெளிப்புற மருத்துவப் பரிசோதனை மட்டுமே வைத்து நிராகரிப்பது கட்டாய வழிகாட்டுதல்கள் மீறுவதாகும் என்று நீதிபதி ரீதோப்ரோதோ குமார் மித்ரா தெரிவித்தார். உரிய விதிகளின்படி புதிய மருத்துவப் பரிசோதனையை நடத்தவும் உத்தரவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றம்: வலது முன்கையில் (வணக்கம் செலுத்தும் கை - Saluting Arm) பச்சை குத்தியிருந்த காரணத்தால் மருத்துவ ரீதியாகத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, உதவி கமாண்டன்ட் பதவி உயர்வு மறுக்கப்பட்ட 2 CRPF/CISF அதிகாரிகளின் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒழுங்குமுறைப் படைகளில் பணியாற்றும் வீரர்கள் ஆட்சேர்ப்பு விதிகளுக்கு அறியாமை கோர முடியாது என்றும், தகுதிநீக்கத்திற்கு காரணமான பச்சை குத்தலை பிற்காலத்தில் அழித்துக் கொள்வது விண்ணப்பித்த காலத்தில் இருந்த தகுதியின்மையை மாற்றாது என்றும் நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் அமித் மகாஜன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
1 செ.மீ உயரம் குறைவு எனக் கூறி நிராகரித்த சி.ஏ.பி.எஃப்; மீண்டும் அளவிட குவஹாத்தி கோர்ட் உத்தரவு
PulseNews சுருக்கம்

மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பித்த ஒருவரின் உயரம் 165 செ.மீ இருக்க வேண்டிய நிலையில், 164 செ.மீ மட்டுமே இருப்பதாகக் கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உரிய மறுஅளவீடு செய்யாமலேயே அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த விவகாரத்தை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி நெல்சன் சைலோ, விண்ணப்பதாரரின் உயரத்தை மீண்டும் முறையாக அளவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business